Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அபிநந்தனுக்கு பஞ்சாப் மாநிலத்தின் பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது

மும்பை: அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகளை வைத்து சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில், இந்த...

100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை கடந்து சாதனை படைக்க பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில் : “இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது, இந்தியாவின் அறிவியல், தொழில் மற்றும் 130 கோடி இந்திய மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை...

கார் மெக்கானிக்கிற்கு மிரட்டல் விட்ட இளைஞர்கள் : வைரலாகி வரும் கண்காணிப்பு கேமராப் பதிவு காட்சி …

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரியில் கார் மெக்கானிக் ஒருவரிடம் மது போதையில் வந்த வாலிபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட் பாத்திமா நகரில் வசித்து வருபவர் முகமது...

நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் … நிதின் கட்கரி வலியுறுத்தல்

டெல்லி, ஜன. 18 - நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.  இந்தியா ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என...

புதுச்சேரி மாநில இலகுரக வணிக வாகன உரிமையாளர் கூட்டமைப்பின் நான்காம் ஆண்டு துவக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக...

புதுச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி பிரதேச இலகுரக வணிக வாகன உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நான்காம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் உத்தமன்...

புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...

சென்னை, ஆக. 24 - மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று  (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான நிதியுதவிகள் : மாநிலங்களவையில்அமைச்சர் நாராயண் ரானே தகவல் !

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக இத்துறையின்  மத்திய அமைச்சர்  நாராயண் ரானே கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: * குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன். * எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உட்பட தொழில்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் கோடி உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள். * எம்.எஸ்.எம்.இ. நிதி மூலம் Rs.50,000 கோடி பங்குத் தொகை உட் செலுத்துதல். * இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI)  ரூ.15,000 கோடி  சிறப்பு மறு நிதியளிப்பு வசதி.  * சிறு நிதி நிறுவனங்கள் மூலம், 25 லட்சம் பேருக்கு கடன் உத்திரவாதத்துடன் கூடிய வசதி. * இந்த நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு பணப் புழக்க திட்டம். * வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு  ரூ.90,000 கோடி கடன் உத்திரவாத திட்டம். கொரோனா பாதிப்பு காரணமாக, வரி செலுத்துவோர் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு,  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு வரி தொடர்பான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.  * வரிச்சட்டங்களின் கீழ் பல இணக்கங்களுக்கு கால வரப்பு நீட்டிக்கப் பட்டது. * விவாத் சே விஸ்வாஷ் சட்டத்தின் நேரடி வரியின் கீழ் வரித்தாக்கலுக்கான தேதி நீட்டிப்பு. * பெருநிறுவன வரிகள் திருப்பி செலுத்தப்பட்டன. * வருமானவரி சட்டத்தின் கீழ் வரிப்பிடித்தம் கூறும் தகுதியான  தொடக்க நிறுவனங்களுக்கு இணைப்பு தேதி நீட்டிக்கப்பட்டது. * வருமானவரி சட்டத்தின் 6ஏ பி பிரிவின் கீழ் பலவிதமான  முதலீடுகளுக்கு வரிப்பிடித்தம் கோருவதற்கான  கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டது.  * தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற வட்டிக்கு பதிலாக வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. காதி இயற்கை வண்ணப்பூச்சு தொடக்கம்: காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு, பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித   மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச் சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம்  நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை  மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம்,  தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம்  ஆகியவற்றில்   பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது.  காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை  உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தரும்.

உணவுப் பொருட்கள் உள்ளதா என சோதனை செய்து பாரதி பூங்காவிற்குள் அனுப்பிய நகராட்சி ஊழியர்கள் : புதுச்சேரி பொதுமக்களிடம்...

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி பாரதி பூங்கா நுழை வாயிலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த உணவு சார்ந்த பொருட்களை நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து அனுமதிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு...

தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் ரோபாக்ஸ் மற்றும் நீர் டாக்சி சேவைகள் – மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள்  இணை அமைச்சர்  சாந்தனு தாக்கூர் கீழ்காணும் தகவல்களை  அளித்தார். நீர்வழி போக்குவரத்து என்பது செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் நிலையில், ரோபாக்ஸ் திட்டங்களை  பல்வேறு வழித்தடங்களில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 7 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 14 திட்டங்கள் செயல்படுத்துதலின் கீழும் 50 திட்டங்கள் உருவாக்கத்திலும் (மொத்தம் 70) உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 3 திட்டங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வெளியிட்டது. பெறப்பட்டுள்ள ஆலோசனைகளை அமைச்சகம் கவனமாக பரிசீலித்து வருகிறது. இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021 ல்  அவை முறையாக சேர்க்கப்படும். சில மாநில அரசுகளிடம் இருந்து  ஆலோசனைகள் இன்னும் வரவில்லை. திறன் இடைவெளி ஆய்வு 21 கடலோர மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டது. துறைமுகம் மற்றும் கடல்சார் துறைக்கு சிறப்பு  கவனம் வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் உற்பத்தி ஆகிய  துறைகளில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை இருப்பது  ஆய்வில் கண்டறியப்பட்டது. பல்திறன் மேம்பாட்டு மையத்தை விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் நிறுவ முடிவெடுக்கப்பட்டது. செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை பங்குதாரரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் உள்ள கட்டிடம் பங்குதாரரிடம் வழங்கப்பட்டு விட்டது.

உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...

புதுச்சேரி, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS