புதுச்சேரியில் தொடரும் தர்ணா- பேச்சுவார்த்தை நடத்த வரும்படி முதல்வருக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.
6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று...
காஷ்மீர் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் துணை சூப்பிரண்ட் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு...
ரஷ்ய கடற்படை தின கொண்டாட்டங்களில் ஐஎன்எஸ் தபார் பங்கேற்றது
ரஷ்ய கடற்படையின் 325வது கடற்படை நாள் கொண்டாட்டங்களில பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை 2021 ஜூலை 22 அன்று சென்றடைந்தது.
ரஷ்ய கூட்டமைப்பிற்கான இந்திய தூதர் டி பி வெங்கடேஷ் வர்மா
கப்பலை பார்வையிட்டார். கப்பலின் தலைமை அதிகாரி அவருக்கு தற்போதைய பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
நமது கடல் பகுதிகளை காப்பதிலும், இந்தியரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்திய கடற்படை ஆற்றி வரும் பங்கை தூதர் பாராட்டினார்.
ரஷ்ய கடற்படையின் பால்டிக் பிரிவின் துணை தளபதி, துணை அட்மிரல் செர்ஜெய் யெலிசெயேவ் 2021 ஜூலை 23 அன்று தபாரை பார்வையிட்டார். அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான வலுவான நட்பு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வரலாறு சிறப்புமிக்க நினைவுக் கல்லறையில் கப்பலின் தலைமை அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி அஞ்சலி செலுத்தினார்.
ஜூலை 25 அன்று, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் ஆய்வு செய்த ரஷ்ய கடற்படையின் 325-வது ஆண்டு விழாவில் தபார் பங்கேற்றது. 2021 ஜூலை 28 மற்றும் 29 அன்று கூட்டுப் பயிற்சியில் கப்பல் பங்கேற்கும்.
5 மாதத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பாண்டிச்சேரி முதலமைச்சர் : முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததைக் கண்டித்து வெளி...
பாண்டிச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
பாண்டிச்சேரி சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்றுத் தொடங்கிய நிலையில் அதில் முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதத்திற்கான அரசின் செலவினங்களுக்காக ரூ.4ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85...
பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …
புதுச்சேரி, மே. 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...
அரசுத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும் … மண்டல மக்கள் தொடர்பு கூடுதல் தலைமை இயக்குநர்
சென்னை, பிப். 12 -
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை பேசினார்.
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல...
2022 அக்டோபர் 1 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை வாகனங்களில் பக்கவாட்டில் இரண்டு காற்று...
டெல்லி, ஜன. 16 -
2022 அக்டோபர் 1 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை மோட்டார் வாகனங்களில் இரண்டு பக்கவாட்டு காற்று பைகளையும் இரண்டு பக்கவாட்டு திரைச்சீலை காற்றுப் பைகளையும் பொருத்துவதைக் கட்டாயமாக்கும் நகல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019 ஜூலை 1...
இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்-புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் தந்தை பேட்டி
பாகல்பூர்:
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும்...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...
தீவிர தேர்தல் பணியின் போது, புதுச்சேரியில் தேர்தல் அலுவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு …
புதுச்சேரி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பபட்டு வருகிறது. இதனிடையே அப்பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு...
























