பிரதமர் நரேந்திர மோடி, ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “நமது விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமை கொள்ளச் செய்கிறார்கள். ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது. நமது குழுவினருக்கு வாழ்த்துகள். அவர்களது வருங்கால முயற்சிகளும் சிறக்க எனது நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.