திருவள்ளூர், மே. 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில் திருவள்ளூர்  ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரிதா சாகு,

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ததாகவும் ஆய்வில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் கண்டறியப்படவில்லை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது எனவும்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யாதது குறித்த கேள்விக்கு ஓவர் லோடு காரணமாகவே கண்காணிப்பு கேமராவில் சற்று நேரம் பழுது ஏற்பட்டதாகவும் பின்னர் அது சரி செய்யப்பட்டு தமிழக முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதுபோன்ற ஓவர் லோடு ஆகாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தினால் உடல் சோர்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது  எனவும்,

மேலும் நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட 4 கோடி பணம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எது மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கும் எனவும், மேலும் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here