கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், அதிமுக ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாள் வருகிற 24 ஆம் தேதி வரயிருக்கிறது.
அதனை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் தாராசுரம் மாதவன் சீதையம்மாள், மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், தலைமையில் நடைபெற்றது.
அதில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன், கலந்து கொண்டு பேசுகையில் ஒன்றியம், பேரூர் பகுதியில் அதிமுக கொடியேற்றுதல், கல்வெட்டு அமைத்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவ மாணவிகள்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் கோலப்போட்டி, விளையாட்டு போட்டி சுவர் விளம்பரம் எழுதுதல், தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட நிர்வாகிகள் செய்யவேண்டியது குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற திமுகவின் கையாளாகாத தனத்தை பொது மக்களிடம் எடுத்துச் சொல்லியும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா, புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆகியோர் ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாது, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று புரட்சித் தமிழர் முதல்வர் ஆவது நிச்சயம் என்று தெரிவித்தார்.
இதில் கைத்தறி பிரிவு மாநில செயலாளர் கே ஜி லெனின், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு த சின்னையன், மகளிர் அணி தலைவி கவிதா ஸ்ரீதர், சோழபுரம் பேரூராட்சி செயலாளர் ஆசாத் அலி, தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் அறிவொளி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.