காஞ்சிபுரம்,ஏப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..

காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில் தினம் தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் அடுத்த கூரம், ஈஞ்சம்பாக்கம், உவேரி சத்திரம், கோவிந்தவாடி அகரம், புதுப்பாக்கம் கம்மார் பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று கிராம கிராமமாக வீடு வீடாக சென்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் புதுப்பாக்கம் பகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை அப்பகுதி திமுகவினர் ஜேசிபி இயந்திரத்தில் 50 கிலோ ரோஜா பூவை கொட்டி பிரச்சார வாகனத்தில் உள்ள வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் ராஜசேகர் மீது மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பை ஈடுபட்டனர். மேலும் வெடி வெடித்தும், மாலை அணிவித்து வேட்பாளர் உற்சாக வரவேற்றது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here