சிம்லா:

இமாசலப்பிரதேசம் மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நம்கியா பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராணுவ வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here