சாலவாக்கம், மார்ச். 19
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15 மகளிர்களுக்கு, சாலவாக்கம் ஊராட்சி மன்றதலைவர் SPV.சத்யாசக்திவேல் தலைமையில், அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு, கம்பெனி பேருந்தில் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்சியில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், கூட்டுறவு வங்கி இயக்குநர் S.R.வெங்கடேசன், E.நந்தா ஊராட்சி துணைத்தலைவர், தனியார் நிறுவன அலுவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.