தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குவது கண்டிக்கத்தக்கது-திருமாவளவன்
நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: -
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி...
காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார்- காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி
நெல்லை:
நெல்லை மாவட்ட காங்கிரசின் தேர்தல் பணி ஆயத்த கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறோம். தேர்தல் பணிக்கான திட்டம், வியூகம் குறித்து கருத்து கேட்டு...
நெல்லை மாவட்டத்தில் சிறுமி உள்பட 3 பேர் மாயம்
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மகள் முபினா பேகம் (வயது17). இவர் வளர்ப்பு தந்தை சாகுல் அமீது. வீட்டில் இருந்து கடந்த 23-ந்தேதி ஜெராக்ஸ் எடுத்து வர கடைக்கு சென்றார். அதன் பிறகு முபினா பேகம் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சாகுல் அமீது கொடுத்த புகாரின் பேரில்...
தென்காசி : வளர் இளம் பெண்களுக்கான அனிமியா விழிப்புணர்வு கூட்டம் ..
தென்காசி, ஏப். 05 -
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருகே அடைக்கலம் பட்டினம் எஸ்.எம்.ஏ பள்ளியில் ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் வளர் இளம் பெண்களுக்கான அனிமியா விழிப்புணர்வு கூட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி தலைமையில் நடைப்பெற்றது .
கூட்டத்தில் பள்ளியில் பயிலும் பெண்...
தென்காசி : அந்தியோதயா, சிலம்பு அதிவிரைவு ரயில்களாக மாற்றம் : நேர அட்டவனை மற்றும் வண்டி எண்ணில்...
தென்காசி, ஏப் - 05
செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில்கள் இனிமேல் அதிவிரைவு ரயில்கள் ஆக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
கோவில்பட்டி துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா...
பாளை அருகே கல்லூரி மாணவர் கொலையில் 19 பேரை பிடித்து போலீசார் விசாரணை
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜா (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி...
எல்லையில் பதட்டமான சூழல்: கூடங்குளம் அணுமின்நிலையம், ஐ.எஸ்.ஆர்.ஓ. மையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
நெல்லை:
இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திர கிரியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்...
வீட்டை அபகரிக்க முயற்சி, அ.தி.மு.க. நிர்வாகி மீது மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்
திருவண்ணாமலை, ஜூலை. 26-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா அரட்டவாடி கிராமம் மல்லிகாபுரம் தண்டா பகுதியைச் சேர்ந்த லம்பாடி சமுதாயத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வி என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் அவர்...
தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்-கமல்ஹாசன்
நெல்லை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் சுகா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு...
திருவண்ணாமலை நகராட்சி முன் தூய்மை ஒப்பந்த பணியாளர்கள் நலச் சங்கத்தினர் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக. 18-
திருவண்ணாமலை டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கத் தலைவர் மலர்வண்ணன் தலைமையிலான துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தலித் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த...