காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள மசால்சி மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்சி பணிக்காக 16 இடங்களும் இரவு காவலர் பணிக்காக காலியாக உள்ள 16 இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.
காஞ்சிபுரம்; செப், 08 –
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மசால்சி, மற்றும்...
புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, மாவட்டத்தின் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மையப்பகுதியான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்...
நகைக்கடை அதிபரிடம் ரூ.20 லட்சம் பறிப்பு-துப்பாக்கியை காட்டி பணத்தை பறித்த கும்பல்
காஞ்சீபுரம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றார்.
இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரும் காஞ்சீபுரத்தில் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் 2 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அவருக்கு அவசரமாக பணம்...
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்
ஆலந்தூர்:
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த...
தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை-கமல்ஹாசன்
ஆலந்தூர்:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.
எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்,...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்-தம்பித்துரை
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது.
பாராளுமன்றத்தில் தமிழகத்தின்...
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி சிறுவன் பலி
மாமல்லபுரம்:
கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 16). மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கு தேவராஜ் குடும்பத்துடன் வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய தினேஷ் கடலில் மூழ்கினார். நேற்று மதியம் கடற்கரை கோவில் அருகே...
கணவர் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதால் புதுப்பெண் தற்கொலை
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூர் காமராஜர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி நித்தியா (27). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சிவசங்கருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்த தகவல் நித்தியாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி...
















