சென்னை, சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் நேற்று 77வது வட்ட இந்து முன்னணி சார்பில்    3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அவ் விழாவில் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்

சூளை, செப். 11 –

சென்னை, சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் 77வது வட்ட இந்து முன்னணி சார்பில்    3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவிற்கு 77வது வட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் பி.என். சீனிவாசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். வட்ட தலைவர் சந்திரபாபு முன்னிலை வகித்தார். விழாவில் அப்பகுதியில் வசிக்கும் 100 ஏழை எளிய மக்களுக்கு பெட்ஷீட் வழங்கப்பட்டது. மேலும் 100 பெண்களுக்கு பெரிய சில்வர் தட்டுடன் மாங்கல்யம் கயிறு,  மஞ்சள், குங்கும், வளையல், ஜாக்கெட் துணி என தாம்பூலம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்து முன்னணி மாநகர பொதுச் செயலாளர் மேகநாதன், துணைத் தலைவர் முருகேசன், செயலாளர் சிவ விஜயன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் தங்கராஜ், எழும்பூர் தொகுதி தலைவர் வெங்கடேஷ், பொதுச் செயலாளர் கார்த்தி ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here