சென்னை, அக். 19 –

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இயற்கைச் சீற்றம் நோய்த்தொற்று இன்னும் பிற நேரங்களில் அவசாரப் பணிகளை கூடுதலாக மேற் கொள்ளவும், சில அமைச்சர்களை வருவாய் மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

அதன்படி பின் வருமாறு வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் கூடுதலாக இப் பணியையும் சேர்த்து பணியாற்றுவார்கள்.

1 சேலம் மாவட்டம் நகராட்சி நிர்வாகம், நகர்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைகச்சர் கே.என்.நேருவும்,

2 தேனி மாவட்டம் கூட்டுறவு புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் இ.பெரியசாமியும்,

3 திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும்,

4 தருமபுரி மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும்,

5 தென்காசி மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனனும்,

6 இராமநாதபுரம் மாவட்டம் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும்,

7 காஞ்சிபுரம் மாவட்டம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனனும்,

8 திருநெல்வேலி மாவட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனும்,

9 திருவாரூர் மாவட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியும்,

10 கோயம்புத்தூர் மாவட்டம் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும்,

11 கிருஷ்ணகிரி மாவட்டம் கைத்தறி மற்றும் துணாநூல் துறை அமைச்சர் ஆர். காந்தியும்,

12 பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரனனும்,

13 தஞ்சாவூர் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்,

14 மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதனும் கூடுதலாக இப்பணியையும் சேர்த்து பொறுப்பாளர்களாக இருந்து பணியாற்றுவார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here