மீஞ்சூர், ஆக. 16 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று வார்டு கவுன்சிலர்களுக்கான மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அக்கூட்டத்தில் செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

அனைத்து வார்டு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு திருவுருவச்சிலை வைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, மன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, குடிதண்ணீர், சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் மீஞ்சூர் பஜார் வீதியில் பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்ததை விட கூடுதலான இடத்தில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வாகன நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்ப்படுவதாகவும், இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் அதுக்குறித்து, ஆய்வு நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் மாமன்ற தலைவரிடம் வலியுறுத்தினார்கள்.

தொடர்ந்து பஜார் பகுதியில் பொது கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆடு அடிக்கும் தொட்டியினை அமைத்திட வேண்டும். மீஞ்சூர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையினை போக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கூட்டத்தில் உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்தனர்.

நீண்ட நேரம் நடைப்பெற்ற அக்கூட்டத்தில் உறுப்பினர்கள் அபூபக்கர், சுகன்யா, துரைவேல் பாண்டியன், பரிமளா அருண்குமார், ரஜினி, உள்ளிட்ட 13 கவுன்சிலர்களும், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் கோபி, பணியாளர்கள் மொய்தீன், கோபி, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மேலும் வார்டு கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்கிட அரசாணைப் பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுப்பினர்கள் அனைவரும் நன்றித் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here