திருவாரூர், மார்ச். 01 –

திருவாரூர் வர்த்தக சங்க திருமண அரங்கில் வருமான வரித்துறை சார்பில் வர்த்தக சங்கத் நிர்வாகிகளுக்கு சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் கடந்த பிப் 28 ஆம் தேதியன்று திருச்சி மண்டல வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் நித்யா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்   வணிகர்கள் அபராதத்தை தவிர்க்க  முன்கூட்டியே வரி செலுத்துதல் குறித்தும், தவணை விவரங்கள் குறித்தும் நிலுவை தேதிகள் மற்றும் வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சியில்  வருமான வரித்துறை துணை ஆணையர் சீனிவாசன் வருமான வரி அதிகாரிகள் ராஜசேகர், சிங்காரவேலு மற்றும் திருவாரூர் வர்த்தக சங்க தலைவர் பாலு உள்ளிட்ட வர்த்தகர்கள், வணிகவரி ஆலோசகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here