அத்திப்பட்டு, டிச. 13 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் திமுக சார்பில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
வெள்ள நிவாரணப் பொருட்கள் அடங்கிய இந்நலத்திட்ட தொகுப்பினை, பெற்றுக் கொண்ட திருநங்கைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கியமைக்காக முத்தமிழறிஞர் கலைஞருக்கும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்வதாக நெகிழ்ச்சியுடன் கூறினர்.
பின்னர் வல்லூர் அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், டி.ஜெ. கோவிந்தராஜன், மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர் அன்புவாணன், வல்லூர் தமிழரசன், பொன்னேரி மா.தீபன், உள்ளிட்ட பலர் அமைச்சருடன் உடனிருந்தனர்.