திருவாரூர், ஆக. 02 –

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் புதியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டதிலும் மூன்றுப் பகுதிகளாக பிரித்து அதற்கான புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சி நியமனம் செய்திருந்தது. அதில் மத்திய மாவட்டச் செயலாளராக தங்க தமிழ் செல்வனை நியனம் செய்திருந்தது.

அதனை தொடர்ந்து அவர் இன்று திருவாரூர் பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களின் திருவுருவச்சிலை மற்றும் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி தனது மாவட்ட செயலாளர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு அவரது பணியினை தொடங்கினார்.

அதற்கான நிகழ்ச்சி இன்று திருவாரூரில் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் அவரது தலைமையில் திரளான அக்கட்சி தொண்டர்கள் பங்கேற்று பெரும் பேரணியாக சென்று, திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்புள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் திருவுருவச்சிலைக்கும், தொடர்ந்து பேரணியாக திருவாரூர் கடைவீதி வழியாக சென்று திமுக நகர அலுவலகம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கர்ம வீரர் காமராஜர் திருவுருவ சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது மாவட்டச்செயலாளர் பணியினை தொடங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல செயலளார் அறிவழகன், மண்டல துணை செயலாளர் ரமணி, தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி , வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்ஓவியா, முன்னாள் மாவட்ட செயலாளர் வடிவழகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here