சென்னை, டிச. 24 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தந்தை பெரியாரின் 48 வது நினைவுத் தினத்தை முன்னிட்டு சென்னை, அண்ணாசாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்படுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.