சென்னை, டிச. 13 –

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன்  கார் வாடகைக்கு ஒட்டி வந்துள்ளார். இவரது மனைவி ஷாலினி இரண்டாவதாக கருவுற்றிருந்த நிலையில் பிரவசத்திற்காக திருவான்மியூரில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை காண்பதற்காக திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு பார்த்திபன் வந்துள்ளார். மதுவுக்கு அடிமையான பார்த்திபன் அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு அவருடைய பர்ஸ், பணம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை தொலைத்துவிட்டு வீடு திரும்பியதால் ஷாலினி கணவரை திட்டியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பலரிடம் அதிகளவில் கடன் பெற்று திருப்பி கொடுக்காமல் இருந்த பார்த்திபனை கடன் கொடுத்தவர்கள் நச்சரித்திருந்த நிலையில் கையில் இருந்த பணம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை தொலைந்ததாலும், மணைவி திட்டியதாலும் மனமுடைந்த பார்த்திபன் தனது மாமியார் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பார்த்திபன் தற்கொலை செய்துகொண்டதை பார்த அவரது மற்றும் மற்றும் உறவினர்க அருகில் உள்ள திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்திபன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here