திருவாரூர், ஆக. 28 –

திருவாரூர் மாவட்டம் புளிச்சக்காடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தின் ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை  108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இப்பூஜையில் 1008 லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்று மகாதீபாராதனை வழிப்பாடு நடைப்பெற்றது. தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

எண்கன் சிவாச்சாரியார் திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தார் அவரோடு ஆலய அர்ச்சகர் நாடாகுடி இராமலிங்கம் உடனிருந்தார். இந்நிகழ்ச்சியை புளிச்சக்காடி கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகச்சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இப்பூஜையில் திரளான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here