ராமநாதபுரம், அக். 14- ராமநாதபுரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம், பட்டணம்காத்தான் சுகம் வைத்தியசாலை, ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் சுகம் வைத்தியசாலை டாக்டர் காளிமுத்து பங்கேற்று டெங்கு காய்ச்சலால் ஏற்படும் தீமைகள், டெங்குவை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் டெங்குவிலிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டிலேயே நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறையையும் கற்றுக்கொடுத்தார். முகாமில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் சூரியமணிகண்ட பிரபு, துணை செயலாளர் மாணிக்கவாசகம், தினகரன், பொருளாளர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர். நகர் செயலாளர் ராசிக் நன்றி கூறினார்.