சென்னை, அக். 11 –

ஜப்பானில் நடைப்பெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமைச் சேர்த்த இரு பெண் வீராங்கணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணி நியமன ஆணையை வழங்கினார்.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜப்பானில் நடைப்பெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கணைகள் செல்வி வெ.சுபா மற்றும் செல்வி எஸ்.தனலட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

ஒலிம்பிக் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்குதல், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு உப கரணங்கள் வழங்குதல், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்தல், வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி விளையாட்டு வீரர் வீராங்கணைகளை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.

அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீராங்கணைகள் செல்வி வெ.சுபா மற்றும் எஸ். தனலட்சுமி ஆகியோர் கடந்த ஜூலை 30 – 2021 ஆம் நாளன்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைப்பெற்ற ஒலிம்பிக் 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்றுப் பெருமைச் சேர்த்த இவ்விரு வீராங்கணைகளையும் கௌவுரவப் படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திரா பிரதாப் யாதவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here