சிங்காநல்லூர்:

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் நொய்யல் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு அவரது அம்மா இறந்து விட்டார். இதனையடுத்து அவரது அக்கா அவரை கவனித்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக தாய் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ரவிக்குமார் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here