திருவண்ணாமலை ஆக.12-

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 இடங்களில் இயங்கி வரும் கட்டண கழிப்பறைகள் எதிர் வரும் 1 ஆம் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம் முன்னிலை வகிக்க நகராட்சி ஆணையாளர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன்கருதி நகரிலுள்ள 15 கட்டண கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்க தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வருகிற 1ந் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்வது, திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் சென்னை பேருந்து நிறுத்துமிடத்தில் பயணிகள் அமர நிழற்குடை அமைத்தல், ஆவின் நூலகம் முன்பு குண்டும் குழியுமான இடத்தினை சமன்படுத்துவது, திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களையும் பராமரிப்பதற்கு தேவையான அனைத்து மின்சாதன பொருட்கள் கொள்முதல் செய்வது, திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள முற்றிலும் பழுதடைந்த மினி பவர் பம்புகளை சரி செய்திட வாய்ப்பில்லாத காரணத்தினால் புதிய மோட்டார்கள் பொருத்துவது மட்டுமின்றி கால்வாய்களை சீரமைத்து சாலை அமைப்பது உள்ளிட்ட 134 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பேசுகையில் திருவண்ணாமலை நகரில் தரமற்ற முறையில் கால்வாய் அமைத்தால் அதில் சில நாட்களிலேயே இடிந்து விழுந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பவர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருவண்ணாமலை பெரிய கோபுரம் பகுதியில் இருந்து பச்சையம்மன் கோவில் வழியாக ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் சாலைகள் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து விரைந்து சாலை அமைத்து தர வேண்டும். திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் மற்றும் எமலிங்கம் அருகே உள்ள எரிமேடை மோசமான நிலையில் உள்ளது. அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் எனவே இதுகுறித்து ஆய்வு செய்து சாலை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் உதவி பொறியாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் அலுவலர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here