காஞ்சிபுரம், ஜன. 26 –

இன்று, இந்திய குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது .தமிழகத்தில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் ஆட்சியர்  ஆர்த்தி மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

(உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்) காஞ்சிபுரம் கூடுதல் கண்காணிப்பாளர் அய்மன் ஜம்ல் அவர்களின் சொந்த முயற்சியில் நடைபெற்ற காவல்துறை காவலர்களின் அணிவகுப்பை காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்யபிரியா, மாவட்ட எஸ்.பி சுதாகர், மாவட்ட ஆட்சியர் ஆரத்தி ஏற்றுக்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் 25 காவல்துறை காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆரத்தி பதகங்களும் சான்றிதழ்களும் வழங்கினார்.

   இதனை தொடர்ந்து மூவண்ண கலரில் இருந்த பலூன்களையும், வெள்ளை புறாவையும் வானத்தில் பறக்கவிட்டனர். மேலும் வடகிழக்கு பருவமழையின் போது சிறப்பாக பணியாற்றிய வருவாய் அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here