ராமநாதபுரம், நவ. 3ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் மற்றும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு மேற் கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைப் பெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் பேசியதாவது;
வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே கனமழை சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. எளிதில் மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ளதாக 39 பகுதிகள் கண்டறியப் பட்டன. இப் பகுதிகளில் மறைநீர் எளிதில் வழிந்தோட ஏதுவாக தற்காலிக கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் அனைத்தும் 15 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மேற் கொள்ளப்பட்டன. அதே போல அவசரகால சூழ் நிலையை எதிர் கொள்ள ஏதுவாக 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
இந் நிலையில் கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு சார்ந்த அலுவலர்கள் மூலமாக உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே தாழ்வான பகுதிகளில் தேங்கும் மலை நீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு அலுவலர்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும். இவ்வாறு தேங்கும் மழைநீரை தற்கால வடிகால் அமைத்து அருகிலுள்ள கண்மாய் ஊரணி குளங்களில் சேமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள கண்மாய்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் உள்ள தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகள் அதன் கரைகளின் தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து அடைப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில் அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய அளவு மணல் மூட்டைகள் சவுக்கு மரங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து அவற்றில் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்து விட வேண்டும். குறிப்பாக வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை வேளாண்மை பொறியியல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்ந்த அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய் வட்டங்கள் வாரியாகவும் ஊராட்சிகள் வாரியாகவும் வேண்டும்,
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மாரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், ராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகப் புத்திரன், பரமக்குடி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஆரோக்கியராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர்  கேசவ தாசன் உள்ளிட்ட அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here