ராமநாதபுரம், செப்.6:-

இராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி கிழக்கு தொகுதி துணை தலைவர் முஹம்மது இப்ராஹிம்  தலைமை வகித்தார். கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, நகர தலைவர் மஹாதீர், புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் காமில் ஹுசைன்  மற்றும் தொகுதி நிர்வாகிகள் மூன்று ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் முஹம்மது முஜாகித் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக இராமநாதபுரம் மாவட்ட கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், உச்சிப்புளி காவல் நிலைய காவல் துறை ஆய்வாளர் ஆடிவேல் கலந்து கொண்டு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உடல்நலம் பாதிப்பு குறித்து விளக்கி பேசினார். முஹம்மது ஜாபர் கான் முஹம்மது தலால், தெளபிக் அகமது ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். கிளைத் தலைவர் செய்யது இப்ராஹீம் நன்றியுரையாற்றினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here