ராமநாதபுரம், அக், 1ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் புதிய திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டராக பிரதீப் குமார் பொறுப் பேற்றுக் கொண்டார். பின்  திட்ட இயக்குனர் / கூடுதல் கலெக்டர் தெரிவித்த தாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் தடையின்றி உடனுக்குடன் மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப் படும். நீர் மேலாண்மை மற்றும் சுற்றுப்புற துாய்மை பணிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்படும். அதேபோல் மாவட்டத்தில் பசமையினை மேம்படுத்திடும் வகையில் வனத் துறையுடன் ஒருங்கிணைந்து பெருமளவு மரக்கன்றுகள் நடும் இயக்கம் செயல்படுத்தப் படும். பொது மக்களும் தங்களது சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்திட முன்வர வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் சார்ந்த குறைகளை விரைவில் தீர்க்க பொது மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம், என்றார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here