பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்கியது உண்மை: மசூத் அசார் தம்பி ஒப்புதல்
லாகூர்:
இந்திய ராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கியது. அதை பாகிஸ்தான் மறுத்தது.
ஆனால் இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கியது உண்மை என ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின்...
இன்று முதல் கொழும்பிலுள்ள தாமரை கோபுரம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு …
கொழும்பு, செப். 15 -
கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தினை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கி அதனை அந்நாட்டு அரசு திறந்து உள்ளது.
இன்று முதல் இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை காண்பதற்கு அம்மயத்தில் உள்ள தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்....
வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி-குவைடோவை ஆதரித்து புளோரிடாவில் உரையாற்றுகிறார் டிரம்ப்
வாஷிங்டன்:
எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பதவியேற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும்...
பல்கேரியா-இந்தியா உறவுகளை மேம்படுத்த சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
சோபியா:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பல்கேரியா, மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல்கட்டமாக நேற்று பல்கேரியா தலைநகர் சோபியா வந்தடைந்த அவர் பல்கேரியா வெளியுறவுத்துறை மந்திரி எக்கடெரினா ஸ்ஹரியேவா-வுடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக, எட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன்...
இஸ்ரேலில் ஈரானுக்கு உளவு பார்த்த முன்னாள் மந்திரிக்கு 11 ஆண்டு சிறை
ஜெருசலேம்:
இஸ்ரேலில், கடந்த 1995-96-ம் ஆண்டில் எரிசக்தித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கோனன் செகேவ். இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்காக உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 2012-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேல் குறித்த ரகசிய தகவல்களை அவர்...
அமெரிக்க தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு-5 பேர் பரிதாப பலி
சிகாகோ:
அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு...
மாட்டிறைச்சி மீதான வரியை நீக்குங்கள்-சீனாவுக்கு டிரம்ப் வேண்டுகோள்
வாஷிங்டன்:
உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு மேல் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள்...
மெக்சிகோவில் விமான விபத்தில் 2 பேர் பரிதாப பலி
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக...
அணு ஆயுதங்களை கைவிடும் வரையில் வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை – டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்:
அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை...
பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
அபுஜா:
நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதிபர்...






















