மதுரவாயல், ஏப். 24 –
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-150, மூர்த்தி நகரில் உள்ள அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று 24.04.2022 மாலை நடைப்பெற்றது.
இவ்விழாவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கரம்பாக்கம் கே.கணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் 150வது மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி பி.ஏ., வட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன், L. அருள், C.சுந்தர், சண்முகசுந்தரம், முனுசாமி, தில்லைவாணன், ஆனந்தம், கௌதம் மற்றும் திமுக வட்ட நிர்வாகிகள், மற்றும் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.





















