55 பந்துகளில் 147 ரன்கள்- டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சாதனை
இந்தூர்:
சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்....
இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் ஏபி டி வில்லியர்ஸ்
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் முடிந்த உடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடினார். இந்நிலையில்...
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்ட்: இந்தியா ‘ஏ’ 392 ரன்னில் ஆல்அவுட்
இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் மைசூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ‘ஏ’, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்வர்ன் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கருண்...
தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன்: ரகானே ஆதங்கம்
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
தொடக்க பேட்ஸ்மேன் முதல் மிடில் வரிசையில் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ்...
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெளியேற்ற வேண்டும்-இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்
புதுடெல்லி:
சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற...
ஜோ ரூட் விஷயத்தில் நடந்தது என்ன?-கேப்ரியல் விளக்கம்
செயின்ட் லூசியா:
செயின்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?- நாளை 2-வது ஒருநாள் போட்டி
நாக்பூர்:
ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் ரிஷப் பந்தை சேர்க்க வேண்டும்-நெஹரா கருத்து
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷப் பந்த் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான...
பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்டில் வீழ்த்தியது இந்தியா
இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி, ஷிகா...
உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இன்று முடிவு: கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு ஆலோசனை
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற மே மாதம் தொடங்கும்...




















