பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்- 2 கருத்து கணிப்புகளில் தகவல்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று சிவோட்டர் நிறுவனமும், இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை தனித்தனியாக நடத்தின.
இந்த 2 கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த 2 முடிவுகளிலும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது தெரிய...
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
இந்து மதத்தை அவமதிக்கும் திமுவிற்கும் இந்தி கூட்டணிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் : திருவாரூரில்...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டு சிறப்புiரையாற்றினார்.
https://youtu.be/CAIHENslnj0
அப்போது பேசிய அவர், தமிழ்மொழி...
18-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு அக்டோபர் 28, 2021 மற்றும் 16-வது கிழக்காசிய உச்சி மாநாடு அக்டோபர்...
புருனே சுல்தான் அழைப்பின் பேரில் 2021 அக்டோபர் 28-ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் 18-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த உச்சி மாநாட்டில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆசியான் – இந்தியா இடையேயான நீடித்த ஒத்துழைப்பு...
54, 439 பேருக்கு மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் – நிதித்துறை இணையமைச்சர் தகவல்
ஜிஎஸ்டி வரி செலுத்திய மற்றும் குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு பாராட்டு சான்றிதழ்: மக்களவையில் தகவல்
ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி தெரிவித்தார்.
மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியது. தமிழகத்தில் 5589 பேருக்கும், புதுச்சேரியில் 47 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மொத்த உணவுதானிய உற்பத்தி 305.44 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் :
தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) தற்காலிக மதிப்பீடுகளின்படி, விவசாயத்தின் மொத்த மதிப்பு கூட்டு (ஜி.வி.ஏ) 3.6 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது, இது ஊரக பகுதிகளில் சிறந்த நுகர்வுகளின் வாய்ப்பைக் குறிக்கிறது.
2020-21ம் பயிர் ஆண்டில் உணவு தானியத்தின் மொத்த உற்பத்தி 2.7 சதவீதம் அதிகரித்து 305.44 மில்லியன் டன் என்ற புதிய சாதனை படைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டிராக்டரின் உள்நாட்டு விற்பனை 2020-21ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று இந்தாண்டு இயல்பாக இருக்கும் என்ற முன்னறிவிப்பும், ஊரக வருவாயை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எளிதாக தொழில் செய்யும் விதிமுறை அமலாக்கம்:
எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியதற்காக, 2020-21ம் நிதியாண்டில், 20 மாநிலங்கள் ரூ.39,521 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டது.தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியுள்ளன.
புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற வணிகர்கள் கூட்டமைப்பின் இருசக்கன...
பாண்டிச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டு வணிக நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை...
அரசுக்கு எதிராக கிரண்பேடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள் -நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி:
கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் என விடிய, விடிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
கவர்னர் மாளிகை...
வெற்றிகளும் இழப்புகளும் வாழ்வின் ஒரு பகுதி – பிரதமர் மோடி
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியின் உணர்ச்சிப் பூர்வமான ட்வீட்டுக்கு பிரதமர் மோடி வெற்றிகளும், இழப்புக்களும் வாழ்க்கையின் ஒரு பகுதி, நீங்கள் உங்கள் முயற்சியை கொடுத்தீர்கள் அது முக்கியமானது என தெரிவத்துள்ளார். அது குறித்து பிரதமர் ட்வீட் பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியின் முதல் சுற்றில் வென்று,...
பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை 2022 ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்தது … இந்திய தேர்தல் ஆணையம்
டெல்லி, ஜன. 16 -
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ,உத்தராகண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று தனித்தனியாக காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உள்ள நிலவரம், கொவிட்...
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின
போர்ட்பிளேர்:
அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை....



















