அபிநந்தனால் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-16
புதுடெல்லி:
பாகிஸ்தானில் உள்ள பலாகோட் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் ராணுவம் கடந்த புதன்கிழமை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றது.
காஷ்மீரில் ரஜோரி ராணுவ முகாமை தகர்ப்பதற்காக பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த மூன்று எப்.16 வகை விமானங்கள்...
350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுகுள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகள் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
விமானப்படையினர் கொன்றதற்கு ஆதாரம் என்ன? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி...
கேரளாவில் தொடரும் சம்பவம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி குத்திக் கொலை
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சிதறா பகுதியை சேர்ந்தவர் பஷீர் (வயது 72)
சிதறா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக பஷீர் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பஷீர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த காங்கிரஸ்...
முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் காலமானார்
மங்களூரு:
கர்நாடக மாநிலம் தட்டிசண கன்னட மாவட்டம் வேணூரைச் சேர்ந்தவர் தனஞ்செய் குமார் (வயது 67). முன்னாள் மத்திய மந்திரியான இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...
மனைவியை கைவிட்ட 45 வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து- மத்திய அரசு அதிரடி
புதுடெல்லி:
வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் திருமணம் முடிந்து, மனைவியரை கைவிட்டவர்கள் குறித்து மத்திய பெண்கள் நல அமைச்சகத்தின் அதிகாரம் படைத்த அமைப்பின் உதவியோடு, விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் 45 பேர் மனைவியரை கைவிட்டு அந்தந்த நாடுகளில் வாழ்வது கண்டறியப்பட்டது. இது குறித்து மேனகா...
உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை:
விபத்து, உடல்நலக் குறைவால் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் தீயணைப்பு நிலைய டிரைவர் வேம்பு, முசிறி தீயணைப்பு நிலைய வீரர் சீனிவாசன், மற்றும் நிலைய அலுவலர் இளங்கோவன்,...
பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி – மோடி ஆவேசம்
பாட்னா:
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே குரலில் பேச வேண்டிய வேளையில் 21 எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக நாம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரத்தை...
ரபேல் விமான தாமதத்துக்கு மோடி மட்டுமே பொறுப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி:
ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் தற்போது இருந்து இருந்தால் இன்றைய நிலைமையே வேறு, இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள்...
அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவறியும் சாதனங்களை பொருத்தியதா?: ஸ்கேன் முடிவு வெளியானது
புதுடெல்லி:
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்திய விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விங் கமாண்டர் அபிநந்தன் விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி...
துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் வழிபாடு
திருமலா:
இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம்.
அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் நேற்று மாலை...















