வீடு திரும்பினார் மனோகர் பாரிக்கர்
பனாஜி:
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு...
அபிநந்தன் பெயரால் டுவிட்டரில் உலவும் போலி கணக்கு
புதுடெல்லி:
பாகிஸ்தானிடம் சிறைபட்டு இந்தியா திரும்பிய அபிநந்தன் வர்தமானை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த காட்சிகள் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அபிநந்தனை பாராட்டியும், வாழ்த்தியும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு...
அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி கொடுத்துவிட்டார்-ராகுல்காந்தி பகிரங்க தாக்குதல்
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விமானங்களின் விலை விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தனியாக பேரம் பேசியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யும் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தில் முன்பு...
ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்-கவர்னர் கிரண்பேடி மீண்டும் வலியுறுத்தல்
புதுச்சேரி:
புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என...
புலவாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதா?: ராகுல் காந்திக்கு அமித்ஷா கண்டனம்
ராஜமுந்திரி :
காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலையும், ரபேல் ஒப்பந்தத்தையும்...
பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும்-இந்தியா வலியுறுத்தல்
புதுடெல்லி:
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது.
மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது,...
மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டாக பேரணி
புதுடெல்லி:
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.
முதலில் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தினார்.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்...
பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்கின்றனர்.
கட்சியின் செயல்பாடு மற்றும் தலைவர்களின் பிரச்சார...
டெல்லி சட்டமன்றத்தில் எழுந்து நின்று விமானப்படை வீரர்களை பாராட்டிய எம்எல்ஏக்கள்
புதுடெல்லி:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 12 நாட்கள் கழித்து, இன்று இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் டெல்லியில்...
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #cycloneFani
புதுடெல்லி
பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள்...














