மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டாக பேரணி
புதுடெல்லி:
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.
முதலில் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தினார்.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்-மோடி தலைமையில் அவசர ஆலோசனை
புதுடெல்லி:
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார்.
அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள்...
கேரளாவில் ஐஏஎஸ் தேர்வில் வென்ற முதல் பழங்குடி இன பெண்ணுடன் மதிய உணவு சாப்பிட்டு பாராட்டுத் தெரிவித்த ராகுல்...
கேரளாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யா குடும்பத்தாருடன் மதிய உணவு சாப்பிட்டு அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
சமீபத்தில் 2018-ம் ஆண்டு நடைப் பெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை...
டெல்லி சட்டமன்றத்தில் எழுந்து நின்று விமானப்படை வீரர்களை பாராட்டிய எம்எல்ஏக்கள்
புதுடெல்லி:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 12 நாட்கள் கழித்து, இன்று இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் டெல்லியில்...
பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும்-இந்தியா வலியுறுத்தல்
புதுடெல்லி:
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது.
மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது,...
பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு
புதுடெல்லி:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் மீதான இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும், உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து...
புலவாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதா?: ராகுல் காந்திக்கு அமித்ஷா கண்டனம்
ராஜமுந்திரி :
காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலையும், ரபேல் ஒப்பந்தத்தையும்...
ஏழைகளுக்கு உதவும் இயக்கத்தை தடை செய்தது ஏன்? : மெகபூபா முப்தி ஆவேசம்
ஜம்மு:
காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் காஷ்மீரில் பிரிவினைவாத கட்சியை சேர்ந்த 5 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் போலீசார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில்...
வீடு திரும்பினார் மனோகர் பாரிக்கர்
பனாஜி:
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு...
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி இடைநீக்கம்
மும்பை:
மும்பை அந்தேரியில் மெக்லியோட்ஸ் என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்ரீநகர் கிளையில் ரியாஸ் அகமது வானி என்பவர் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவில் அவர்,...















