சென்னை; நவ. 19-

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பிஜேபி மாநில செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் எல் முருகன் விசாரணை நடத்தவுள்ளார். 

 சென்னை சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 இந்த விசாரணையின் போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை, கோப்புகள், வழக்கு குறிப்புகள் உட்பட உரிய ஆவணங்களை கொண்டு வருமாறு  கூறப்பட்டுள்ளது.

 இந்த விசாரணையின் போது, மனுதாரரும் ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here