குன்றத்தூர், அக். 29 –

முகலிவாக்கம் ஊராட்சி ஆட்டோ நிறுத்தம் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் இருபத்தி ஆறாம் ஆண்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் ஏழை ஏளியோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள்.

குன்றத்தூர் ஒன்றியம் முகலிவாக்கம் ஊராட்சி மன்ற எதிரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் சார்பில் 26 ஆம் ஆண்டு ஆயுத பூஜையை விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது. அதில் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பெயர் பலகை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இந் நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என் எஸ் ஏ. மணிமாறன், குன்றத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் உமா மகேஸ்வரி வந்தே மாதரம்,  ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா சத்தியநாதன், துணைத் தலைவர் வனிதா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர் களுக்கு அச்சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் சண்முகம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கத்தலைவர் சண்முகம், செயலாளர் சம்பத், பொருளாளர் அருண், துணைத்தலைவர் மணிகண்டன், துணைச் செயலாளர் சுரேஷ், கௌரவத் தலைவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து விழாவினை சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்வின் முடிவில் சங்க  உறுப்பினர்களுக்கு இனிப்புகள் மற்றும் நினைவு பரிசாக ஹாட்பாக்ஸ்கள் வழங்கப் பட்டது.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here