சென்னை, சனவரி. 21 –

இப்படத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தைச் சார்ந்த ஆரூர் கே. நாகராஜ் என்பவரின் தாய் கனகவள்ளி எனும் அம்மையார் தனது குடும்பத்தினருடன் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள முப்பத்தம்மன் கோவிலுக்கு அருகே நடைப்பெற்ற உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு வந்துள்ளார். மேலும் அவர் சற்று மனநலம் பாதிப்பிற்கு உள்ளானவர். இந்நிலையில் அவர் வழித் தெரியாமல் அவ்விடத்தில் இருந்து நேற்று காலை முதல் காணவில்லை எனவும் மேலும் தற்போது வரை அவர் வீடு திரும்பவில்லையெனவும் அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் காணாமல் போன அத்தாயார் குறித்த தகவல் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் மற்றும்  அவரைக் கண்டுப்பிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அக்குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள தி.நகர் பாண்டிப்பஜார் காவல்நிலையத்தில் வழங்கிவுள்ளனர்.

மேலும் படத்தில் உள்ள கனகவள்ளி தாயாரை தாங்கள் செல்லும் வழிப்பதையில் காண நேரிட்டால் தங்களின் சிரமங்களை பாராமல் தாயை காணாமல் தவிக்கும் அவர்களின் குடும்பத்திற்கு உதவிடும் நோக்கில், அவர் இருப்பிடம் குறித்து தி.நகர் பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கோ அல்லது அவரது மகனின் செல்போனிற்கோ தகவலலித்து உதவிடும்படி நன்றி உணர்வோடு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

தொடர்புக்கு ; 70104 11740 மற்றும் 99406 45536

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here