கும்பகோணம், ஏப். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வாக்கை செலுத்தினார்.

கும்பகோணம் அருகே தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க ஸ்டாலின் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை அருகே மருத்துவக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here