திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணிபுரிந்து வந்த பி.பி.முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணியாற்றி வந்த ஜி.பழனி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.