கும்பகோணம், ஜூலை. 27 –

கும்பகோணத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தவறிய அலுவலர்களின் நடவடிக்கையைக் கண்டித்து விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மெலட்டூர் விழுதியூர் சடையன்கால் உள்ளிட்ட பகுதிகளில்   காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர் தில்லைவனம் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஏ.இராதாகிருஷ்ணன், ஏ.எம்.ராமலிங்கம், ஜி.கல்யாணசுந்தரம்,   எஸ்.மணிவேல், எம்.வெங்கடேசன் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். காட்டுப் பன்றிகளால் விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தியும்,  வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை மனுவை கோட்டாட்சியிடம்  அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here