காஞ்சிபுரம், ஆக. 03 –

நேற்று, காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள் மிகு குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் வெள்ளி ரத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட சுப்ரமணிய சுவாமி வள்ளி தேவயானையுடன்  வெள்ளி ரதத்தில் எழுந்தருளி மேள தாளங்களுடனும் வானவேடிக்கைகளுடனும் ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து முருகப்பெருமானின் பேரருளை பெற்று சென்றனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here