கும்பகோணம், மே. 08 –

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகத்தில், தமிழகத்திலேயே முதன்முறையாக, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது அதன் திறப்பு விழா இன்று அங்கு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதனைத் திறந்து வைத்தார்.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான 150 பேர் ஓய்வெடுக்கும் வசதிகள் உள்ள  புதிய ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதனைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது அமைச்சருடன் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, தொழிற்சங்கத்தினர் சார்பில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கும் போது, “தமிழக அரசின் ஈராண்டு சாதனையில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் என்பது, 21,000 அரசுப் பேருந்துகளை வைத்துக் கொண்டு எப்படி தமிழகத்தில் மட்டும் சிறப்பாக செயல்படுத்த முடிகிறது என இந்திய அளவில் பல்வேறு மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. எனவும் மேலும், கர்நாடக மாநிலத் தேர்தலில் கூட இத்திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது. என அப்போது தெரிவித்தார்.

மேலும் இத்திட்டம் தொடங்கப்பட்டதின் வாயிலாக நேற்று வரை 280 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டு பயனடைந்துவுள்ளனர். என்றார்..

மேலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு, இத்திட்டத்தில் 40 லட்சம் மகளிர் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் பெண் ஒருவருக்கு மாதம் தோறும் ரூ.888 அளவிற்கு செலவு மிச்சப்படுகிறது. எனவும் கூறினார்.

மேலும், போக்குவரத்து தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிட்டு வருகிறோம். எனவும் மேலும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் ஒன்று கூட நிரப்பப்படாத நிலையில், தற்போது இதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும், மேலும் அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. எனவும், மேலும் இது நடைமுறைக்கு வர சுமார் 3 மாதங்கள் வரை ஆகும் என அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

 

தொடர்ந்து அவர் தெரிவிக்கும் போது, சில நேரங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கடைசி நேரத்தில் பணிக்கு வராமல் இருப்பதால், மக்களுக்கான போக்குவரத்து சேவையினை நிறுத்தாமல் இருக்க, தேவையான இடங்களில் மட்டும் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. என தெரிவித்த அமைச்சர், மேலும், கொடைக்கானலில் உள்ளது போன்ற சேவை, கும்பகோணத்தில் இருந்து நவக்கிரக ஸ்தலங்களை இணைக்கும் பேருந்து வசதி, புதிதாக கொண்டு வரப்படும். எனவும், புதியதாக 2,000 பேருந்துகள் வந்த பிறகு, இத்திட்டம் இங்கு  நடைமுறைப்படுத்தப்படும். என அப்போது தெரிவித்தார்.

மேலும், நடத்துநர், ஓட்டுநர்கள், பிற ஊழியர்கள் என 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். எனவும், அதனால் போக்குவரத்துக் கழகங்களில் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள், தகராறுகள் ஏற்படுவது இயல்பு என்ற போதிலும்  அவைகள் வராமல் தடுக்க பணியிட மாறுதல், பணியிடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகிறது என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here