தஞ்சாவூர், ஏப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. அதில் ஆண் வாக்காளர்கள்- 7,27,166. பேர் பெண் வாக்காளர்கள் – 7,73,932 பேர் மூன்றாம் பாலினம்- 128 பேர் என மொத்தம் 15,01,226. வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் 1,710 வாக்குச்சாவடிகளில் 92 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு. அந்த மையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் 2,050 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள். 2,080 கட்டுபாட்டு இயந்திரங்கள். 2,221 ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள். பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் பணியில் 8,404 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தாலுக்கா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு போலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here