ராமநாதபுரம், அக்.1பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இவ்விளையாட்டு போட்டியானாது 13 வயதிற்குட்பட்டோர் (10 கி.மீ.), 15 வயதிற்குட்பட்டோர் (15 கி.மீ.), மற்றும் 17 வயதிற்குட்பட்டோர் (20 கி.மீ.) என 3 பிரிவுகளாக மாணவ மாணவியர்கள் என இருவருக்கும் தனிதனியாக நடத்தப்பட்டன. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.  இந் நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியல், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட விரைவு மிதிவண்டி கழக தலைவர் பால்பாண்டியன், மாநில துணைத்தலைவர் ஜான்சன், கலைச்செல்வன், ராமநாதபுரம் தாசில்தார் தமிழ்செல்வி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here