தேனி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் காய்கறி, குப்பை, மற்றும் மாட்டுச்சானம் போன்ற கழிவுகளியிருந்து மனித தேவைக்கான சமையல் எரிவாயு, பயிர்களுக்கான நாசிகிருமி, போன்றவைகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து, பொது மக்களிடையே செயல் முறை விழிப்புணர்வு செய்தனர்.

 

 

மத்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தற்பொழுது தூய்மை பாரத கோடை கால தீவிர தூய்மை பணி (SBSI -2.0) குறித்து தீவிர தூய்மை பணியில் ஈடுபட இளையோர் மன்றங்களுக்கு அறிவுறுத்தி யுள்ளது .அதனடிப்படையில் தேனி நேரு யுவகேந்திராவில் பதிவு பெற்ற மரிக்குண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் இன்று மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என பிரித்து மக்கும் குப்பைகளால் இயற்கை முறையில் உரம் தயாரித்தல் குறித்தும், விவாசயத்தில் பயன்படுத்தும் கிரிமி நாசினியாக பயன்படுத்துதல் குறித்தும் குன்னூர் அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு விளக்கி செய்முறை மூலம் விளக்கப்பட்டது .

மேலும் மாட்டுச்சானம் மற்றும் இயற்கை காய்கறி பழங்களின் கழிவுனால் கிடைக்கும் கழிவு பொருட்களிலிருந்து இயற்கை முறையில் வீட்டுக்கு பயன்படுத்தபடும் சாண எரிவாயு தயாரித்தல் குறித்து செயல் விளக்கங்களுடன் விவசாயிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் நேரில் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. சாண எரிவாயு விழிப்புணர்வு முகாமை இளைஞர் மன்ற தலைவர் பரமசிவம் மற்றும் மன்ற உறுப்பினார்கள் செய்திருந்தனர். மேலும் தனிநபர் கழிப்பறை பயன்படுத்துதல் குறித்தும் பிரச்சாரம் மேற் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here