பொன்னேரி, செப். 17 –
பொன்னேரி வட்டாரத்தில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் அமந்துள்ள புதியபேருந்து நிலயத்தில் நிருவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மீஞ்சூர் திமுக நகர கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதேபோன்று பொன்னேரி நகராட்சியின் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 144 வது பிறந்தநாளை சமூக நீதி நாளாக கடைபிடித்து அவரது திருவுருவ சிலைக்கு பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் .பரிமளம் விஸ்வநாதன்.திமுக நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார்.ஆகியோர்ரது தலைமையில் சாதியை ஒழிப்போம் என்ற தத்துவ வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று சமூகநீதி உறுதிமொழி ஏற்று பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திமுக. விடுதலை சிறுத்தைகள். கம்யூனிஸ்ட். திராவிட பேரியக்கங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஒருங்கிணைந்து கலந்து கொண்டு பேரணியை நடத்தினர்.