கும்பகோணம், டிச. 02 –

கும்பகோணம் அருகே உள்ள திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு 3வது நாளாக கரும்பு விவசாயிகள் நூதன முறையில் கழுத்தில் தூக்கு கயிறு போட்டு கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலையின் முன்பாக விவசாயிகள் 5அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பகுதியாக இன்று கரும்பு விவசாயிகள் தூக்குகயிறு போட்டு நூதன முறையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் தெரிவித்த போது  விவசாயிகளின் பெயரில் சுமார் ரூ.300 கோடி வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

விவசாயிகளின் கரும்புக்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டு, வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள பயிர்க்கடன் தொகை முழுவதையும் வங்கியில் செலுத்த வேண்டும், மத்திய – மாநில அரசுகள் அறிவித்த கரும்பு மற்றும் லாபத்திற்கான முழுத்தொகை மற்றும் வெட்டுக்கூலி, வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும்,

சர்க்கரை ஆலை தொடர்பான பேச்சு வார்த்தையை, விவசாயிகள் முன்னிலையில் வெளிப்படையாக நடத்த வேண்டும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மூடப்பட்ட சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும்,

இல்லையென்றால்  தற்போது உள்ள நிர்வாகத்தை வெளியேற்றி விட்டு சக்கரை ஆலையை விவசாயிகளிடம் கொடுத்தால் விவசாயிகள் சர்க்கரை ஆலை ஏற்று நடத்த தயாராக உள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நாக முருகேசன் மாநில செயலாளர்கள் தங்க காசிநாதன், ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தத் தொடர் காத்திருப்புப் போராட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கண்டனம் முழக்கமிட்டனர்.

தொடர்ந்து நாளை 4வது நாளாக சர்க்கரை ஆலைக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் எனவும் அப்போது கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

 

 

 

பேட்டி..

நாக. முருகேசன்,

மாநில செயலாளர்,

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here