ஒரகடத்தில் பிரபல கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ..
காஞ்சிபுரம், மே. 20 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது நேற்றிரவு இரவு 7 மணி முதல் வரை மூன்று மணி நேரத்திற்க்கும் மேலாக எரிந்தது. அதனை அணைக்க தொழிற்சாலையில் மூன்று தீயனைப்பு வாகனங்கள்...
காஞ்சிபுரம் : இன்று திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளி வந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம்.. மகாத்தான வரவேற்பளித்த...
காஞ்சிபுரம், மே. 20 -
திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்மன்ற உறுப்பினரும் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைக் காண மேளதாளங்கள் முழங்க அப்படத்தை வரவேற்று அதனைக்காண ரசிகர்கள் குவிந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று ...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பல்வேறு இடங்களில் கன மழை – மகிழ்ச்சியில் மக்கள் ..
காஞ்சிபுரம், மே. 14 -
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் துவங்கியதை தொடரந்து கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை நேரத்தில் கன மழை பெய்து வருவதால் குளுர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.
குறிப்பாக காஞ்சிபுரம்...
ஆதரவின்றி சாலையில் சுற்றித் திரிந்த 8 வயது சிறுமியை மீட்டு சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைப்பு
காஞ்சிபுரம், மே. 13 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பஜாரில் வாய்பேச முடியாத 8 வயது சிறுமி ஒருவர் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக சுங்குவார்சத்திரம் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்....
காஞ்சிபுரத்தில் நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மூவர் சிறையில் அடைப்பு : காஞ்சிபுரம் கோட்டாச்சியர் உத்தரவு
காஞ்சிபுரம், மே. 13 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நன்னடத்தை பிணையை மீறிய காஞ்சிபுரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான பரத்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய காஞ்சிபுரம் வரதாராஜ பெருமாள் வைகாசி பிரமோற்சவம் : இரண்டாண்டிற்கு பின் நடைப்பெறுவதால் பக்தர்கள் மகிழ்சி
காஞ்சிபுரம், மே. 13 -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நோய்தொற்று காரணமாக இரண்டாண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும், வரதராஜ பெருமாள்...
கிணற்றில் குளிக்கச் சென்ற +2 மாணவன் சேற்றில் சிக்கி பலி : மாகரல் காவல்நிலைய போலீசார் விபத்துக்...
காஞ்சிபுரம், மே. 07 -
வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தில் +2 படிக்கும் பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவளுர் ...
காஞ்சிபுரம் : அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டுப் பெறக்கூடாது : உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர்...
காஞ்சிபுரம், மே. 02 -
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்த பணமும் கையூட்டு வாங்கக் கூடாது என்றும் மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் தாலூகா சிறு காவேரிப்பாக்கம் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில்...
ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் விசாரணை …
காஞ்சிபுரம், ஏப். 25 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாசலம் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலாஜி - (40) இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மகன் விஜய் காஞ்சிபுரத்தில் +2 படித்து வருகிறார்....
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப்பெற்ற பா.ஜ.க ஆர்ப்பாட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் முழக்கம்
காஞ்சிபுரம், ஏப். 25 -
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை அழிக்க நினைக்கும் வகையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர்...
























