செங்கல்பட்டு, மார்ச். 26 –

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டாக்டர் சைலந்திரபாபு இன்று காலை வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கு. ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார். பின்பு அங்கிருக்கும் தினசரி குற்றப்பதிவு, வருகைப்பதிவேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நுண்ணறிவுடன் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் திருட்டு வழக்குகளை திறம்பட கண்டு பிடித்ததற்கும், மேலும் குற்றங்கள் நடைப்பெறாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதைப் பாரட்டினார்.

மேலும், காவல் நிலைய ஆய்வாளர் ஜெ. மணிமாறன், உதவி ஆய்வாளர் எஸ். விஜயகுமார் மற்றும் காவல் ஆளிநர்களையும் பாரட்டினார் பின் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பணம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here