மீஞ்சூர், ஏப். 19 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தவாயல் ஊராட்சித் தலைவரின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவ்வூராட்சி மன்ற துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் செல்வி சேகர், சுரேஷ், அஸ்வினி சதீஷ், ரத்தினம்மாள் தேவன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், மேலும் இதில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் இந்த ஊராட்சியில் மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் திட்டங்களை சரி வர செயல்படுத்துவதில்லை என்றும், மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்கள் வேலை என கூறி குறைந்த நாட்களே வேலை வழங்கி பொதுமக்களை ஏமாற்றுவதாகவும், மேலும் இப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட பலமுறை கிராம பொதுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், மேலும் மூன்றாவது வார்டு மற்றும் நான்காவது வார்டில் ஏற்பட்டுள்ள குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க  மின்மாற்றி அமைக்க பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேலும், குடிநீருக்காக மேல்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு அதனை கொண்டு வராமல் பழுதடைந்த நிலைமையில் அரசு நிதியை வீணாக்குவதை கண்டித்தும், பஞ்சாயத்தில் ஏற்படும் துணைத் தலைவர் பதவி மற்றும் துணை அதிகாரம் குறித்த பிரச்சினைகளை கண்டித்தும், அரசாங்கத்தால் வீடு கட்டும் திட்டத்திற்கு கணக்கு கொடுக்கப்பட்டு நான்கு வருடம் கடந்தப் பின்னும் இதுநாள் வரையில் வீடு வழங்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட வந்த மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் மற்றும் நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் ஆகியோரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறை பிடித்து கடுமையான வாக்குவாதத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இருவரும் பதிலளிக்க முடியாமல்  அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here