சென்னை, டிச. 18 –

இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்க்கம் அருகே படூரில் இயங்கி வரும் இந்துஸ்தான்  பல்கலைகழகத்தில் வருடாந்தோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஆன்லைனில் கிறிஸ்துமஸ் விழாவை கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

இந்தாண்டு கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஏசு கிறிஸ்து பிறந்த மாட்டு கொட்டகை அமைத்து அதில் குழந்தை ஏசு, தேவ தூதர்கள், ஆடு, மாடுகள் உள்ளதையும் தத்துருவமாக செய்துள்ளனர். மேலும் பள்ளி சிறுவர்கள் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பாடல் பாடி, நடனமாடினார்கள். கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏசு கிறிஸ்து பிறந்ததை பாடலாக பாடியும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். 

முன்னதாக கொரியா குடியரசின் தூதரக ஜெனரல் (Young Seup Kwon) எங் சி.அப்.ஓன் (KEB Hana Bank) கே.இ.பி. ஹனா வங்கி மூலம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஏழை எளிய மாணவர்கள் 25 பேரை தேர்ந்தெடுத்து (8,00,000) ரூபாய் எட்டு லட்சம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here